“அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை”- வில்லன் நடிகர் விளக்கம்

“அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை”- வில்லன் நடிகர் விளக்கம்
“அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை”- வில்லன் நடிகர் விளக்கம்

அஜித் படத்தில் தான் நடிக்கவில்லை என்று தெலுங்கு கபீர் துஹன் சிங் விளக்கம் அளித்துள்ளர்.

அஜித்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைப்பெற்று வருகிறது. இந்தப் படத்தில் கபீர் துஹன் சிங் வில்லனாக நடிப்பதாக தகவல் பரவ ஆரம்பித்தது. அதற்கு தகுந்தாற்போல் ட்விட்டரில் அவர் வேட்டை சட்டையுடன் வலம் வரும் புகைப்படம் ஒன்று வைரலாக பரப்பபட்டது. இவர் ஏற்கெனவே அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்தவர். ஆகவே இயக்குநர் சிவா இவரை நடிக்க வைத்திருக்கலாம் என சந்தேகம் நிலவியது. 

ஆனால் இந்த வதந்தி பரவ ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே கபீர் தன் ட்விட்டர் பகக்த்தில் தமிழிலேயே ட்வீட் போட்டு விளக்கம் அளித்துள்ளார். ஹரியானாவை பிறப்பிடமாக கொண்ட இவர் அரைகுறையான தமிழில் ட்வீட் போட்டிருப்பது பரபரப்பாகி இருக்கிறது. அவரது ட்விட்டரில் “ என் இனிய நண்பர்களே.. நான் விசுவாசம் படத்தில் நடிக்கவில்லை. தற்போது நான் காஞ்சனா 4 மற்றும் நடிகர் சித்தார்த் உடன் நடிக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com