கடவுளை நம்பல, நாகார்ஜுனாவை நம்பறேன்: ராம் கோபால் வர்மா

கடவுளை நம்பல, நாகார்ஜுனாவை நம்பறேன்: ராம் கோபால் வர்மா
கடவுளை நம்பல, நாகார்ஜுனாவை நம்பறேன்: ராம் கோபால் வர்மா

நான் கடவுளை நம்பவில்லை, நாகார்ஜுனாவின் திறமையை நம்புகிறேன் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறினார்.

ராம் கோபால் வர்மா இயக்கிய ’சிவா’ என்ற படத்தில் நாகார்ஜுனா ஹீரோவாக நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான இந்தப் படம், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. தமிழிலும் ஹிட்டான இந்தப் படம் நாகார்ஜுனாவுக்கு சிறந்த அடையாளத்தைக் கொடுத்தது. இந்தப் படம் 1989-ல் வெளியானது. 28 வருடத்துக்குப் பிறகு ராம் கோபால் வர்மாவும் நாகார்ஜூனாவும் இணையும் படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் பேசிய நாகார்ஜுனா, ‘28 வருடத்துக்கு முன் வெளியான ’சிவா’ என் வாழ்க்கையை மாற்றியது. இப்போது மீண்டும் இணைந்திருக்கிறோம். எனது மனநிலையை இப்போது என்னால் விவரிக்க முடியாது’ என்றார்.

ராம் கோபால் வர்மா பேசும்போது, ‘ எனது படைப்பாற்றல் குறைந்துவிட்டதாக எல்லோரும் விமர்சிக்கிறார்கள். என் படைப்பாற்றல் அப்படியேதான் இருக்கிறது என்பதை இந்தப் படம் உறுதிப்படுத்தும். நான் கடவுளை நம்பவில்லை. நாகார்ஜூனாவின் நடிப்புத் திறமையை நம்புகிறேன்’ என்றார். இந்தப் படத்தில் போலீசாக நடிக்கிறார் நாகார்ஜுனா. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com