திரையரங்கு அனுபவத்தை ஆன்லைன் தளங்களால் தரமுடியாது - நடிகை அனுஷ்கா சர்மா

திரையரங்கு அனுபவத்தை ஆன்லைன் தளங்களால் தரமுடியாது - நடிகை அனுஷ்கா சர்மா
திரையரங்கு அனுபவத்தை ஆன்லைன் தளங்களால் தரமுடியாது - நடிகை அனுஷ்கா சர்மா

திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் அனுபவத்தை நிச்சயம் ஆன்லைன் தளங்கள் கொடுக்காது என நடிகை அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்

கொரோனா அச்சுறுத்தல், ஊரடங்கு போன்ற காரணங்களால் திரையரங்குகள் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சில முன்னணி நடிகர் நடிகைகளின் படங்கள் தற்போது ஆன்லைன் தளங்களில் வெளியிடப்படுகின்றன. கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் முன்னனி நடிகர்களின் பார்வையும் ஆன்லைன் தளங்கள் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிதாபோ திரைப்படம் போன்ற படங்கள் வரும் மாதங்களில் நேரடியாக அமேசானில் வெளியாக உள்ளன. தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஆன்லைன் தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பும், ஒரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்படங்களாக இல்லாமல், வெப் சீரியஸ் கலாசாரமும் வேறூன்றி வருகிறது. சமீபத்தில் இந்தி முன்னணி நடிகை அனுஷ்கா சர்மா தயாரித்துள்ள பாட்டல் லோக் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள அனுஷ்கா, OTTகள் பரவலாக பேசப்பட்டாலும், திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் அனுபவத்தை நிச்சயம் ஆன்லைன் தளங்கள் கொடுக்காது.

இந்திய மக்கள் கூட்டமாக நேரத்தைக் கழிப்பதில் ஆர்வம் உடையவர்கள். நாங்களும் அதற்கே ஆர்வமாக இருக்கிறோம். ஆன்லைன் தளங்களும் செயல்படும், அதற்கேற்ற கதைகள் தான் அங்கு வெளியிட முடியும், ஆனால் திரையரங்குகளும், திரைப்படமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com