“விஜய்யின் வெறித்தனமான ரசிகை நான்”- வரலக்ஷ்மி சரத்குமார்

“விஜய்யின் வெறித்தனமான ரசிகை நான்”- வரலக்ஷ்மி சரத்குமார்
“விஜய்யின் வெறித்தனமான ரசிகை நான்”- வரலக்ஷ்மி சரத்குமார்

நடிகர் விஜய்யின் வெறித்தனமான ரசிகை நான் என நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்தார்.

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய்  நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பேசிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், நான் நடிகர் விஜய்யின் வெறித்தனமாக ரசிகை எனத் தெரிவித்தார். மேலும் தன்னுடைய நான்கு கனவுகளும் ஒரே நேரத்தில் நிறைவேறியிருப்பதாக கூறினார். விஜய் படத்தில் நடிக்க ஆசைப்பட்டது முதல் கனவு எனக் குறிப்பிட்ட வரலக்ஷ்மி, முருகதாஸ் படத்தில் ஏற்கெனவே ஒருமுறை வாய்ப்பை தவறவிட்ட நிலையில் தற்போது இந்த முறை நிறைவேறியுள்ளதால் இரண்டாவது கனவும் நிறைவேறிவிட்டதாக கூறினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை தனது படத்தில் இருப்பதால் மூன்றாவது கனவும், பெரிய தயாரிப்பில் நடிப்பதால் 4-வது கனவும் நிறைவேறிவிட்டதாக கூறினார். ஒரே நேரத்தில் 4 கனவுகளும் நிறைவேறியதால் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறிய அவர், படம் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com