தற்போது கீர்த்தி சுரேஷ், ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு கீர்த்தி சுரேஷ் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் தகவல் பரவியது. அதில் கீர்த்தி சுரேஷின் பெற்றோர் இவருக்குத் திருமணமான செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார் ஒரு முக்கியமான அரசியல் கட்சியுடன் நெருக்கமாகத் தொடர்பில் உள்ளவர். எனவே, கீர்த்தி சுரேஷூக்கு அவர் அரசியல் வாழ்க்கையோடு தொடர்புடைய ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்பட்டது.