"தலைவன் இருக்கின்றான் படத்தில் நான் இல்லை” - பூஜா குமார் விளக்கம்

"தலைவன் இருக்கின்றான் படத்தில் நான் இல்லை” - பூஜா குமார் விளக்கம்
"தலைவன் இருக்கின்றான் படத்தில் நான் இல்லை” - பூஜா குமார் விளக்கம்


“தலைவன் இருக்கின்றான்” படத்தின் இசைப்பணியில் கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பணியாற்றிய விதம் தனக்குப் பிரமிப்பைத் தந்ததாக நடிகை பூஜா குமார் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “தலைவன் இருக்கின்றான்” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தலைவன் இருக்கிறான் படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தேவன் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படும் நிலையில், இதில் நாசரின் மகனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், நடிகைகள் ஆண்ட்ரியா மற்றும் விஸ்வரூபம் மற்றும் உத்தமவில்லன் படங்களில் கமலுடன் இணைந்து நடித்த பூஜா குமார் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நடிகை பூஜா குமார் சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் “தலைவன் இருக்கின்றான்” படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும் போது “ நான் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க வில்லை” எனப் பேசினார். அவரிடம் இடைமறித்து நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா எனக் கேட்டபோது யாருக்குத் தெரியும் வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் கமல்ஹாசன் மற்றும் ஏ. ஆர். ரகுமான் இணைந்து பணியாற்றிய ஒரு தொகுப்பில் தான் பங்கு கொண்டதாகவும் அந்தச்சந்திப்பு தனக்குப் பிரமிப்பைத் தந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார். “தலைவன் இருக்கின்றான்” படத்தைக் கமலின் ராஜ் கமல் நிறுவனத்துடன், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. வடிவேலு மற்றும் நடிகை ரேவதியும் இப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com