‘மொராக்கோவில் இருந்து திரும்ப மாட்டேன்” எமிஜாக்சன் அதிர்ச்சி ட்விட்

‘மொராக்கோவில் இருந்து திரும்ப மாட்டேன்” எமிஜாக்சன் அதிர்ச்சி ட்விட்
‘மொராக்கோவில் இருந்து திரும்ப மாட்டேன்” எமிஜாக்சன் அதிர்ச்சி ட்விட்

‘இனி மொராக்கோவில் இருந்து திரும்பமாட்டேன்’ என்று நடிகை எமிஜாக்சன் ட்விட் செய்திருப்பதைக் கண்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரஜினியின் ‘2.0’ படத்தில் மிக வித்தியாசமான ரோலில் நடிகை எமிஜாக்சன் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக தமிழில் படங்கள் இல்லை. பல வருடங்களாகவே அவர் பாலிவுட்டில் செட்டில் ஆகி விட்டார். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் லண்டன் சென்று அங்கே நடக்கும் மாடலிங் ஷோக்களில் பங்கேற்று வந்தார். சமீபத்தில் லண்டனில் நடந்த ஃபேஷன் ஷோவில் பங்கேற்க முடியாதது குறித்தும் அவர் கவலைத் தெரிவித்திருந்தார். சென்னை மற்றும் மும்பையில் அவருக்கு சொந்தமாக வீடுகள் உள்ளன. அவர் எங்கு நடிக்கிறாரோ அதற்கு தக்க அந்த வீடுகளை பயன்படுத்தி வந்தார். 

இந்நிலையில், அவர் தற்சமயம் வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கு பயணம் செய்திருந்தார். அங்கே உள்ள அழகிய காட்சிகளைக் கண்ட அவர் அங்கேயே செட்டில் ஆக முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஒரு சிறு வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் எமி வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நான் மொராக்கோவிற்கு குடியேற இருக்கிறேன், இனிமேல் திரும்ப போவதில்லை..பை’ என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com