“எஸ்.பி.பி சுயநினைவுடன் இருக்கிறார்” - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

“எஸ்.பி.பி சுயநினைவுடன் இருக்கிறார்” - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
“எஸ்.பி.பி சுயநினைவுடன் இருக்கிறார்” - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுயநினைவுடனும், சொல்வதை புரிந்துகொள்ளும் வகையிலும் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது அறிக்கை மூலம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், எஸ்.பி.பி-க்கு வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர் சுயநினைவுடனும், சொல்வதை புரிந்துகொள்ளும் வகையிலும் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடல்நிலையை மருத்துவக்குழு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், எஸ்பிபி உடல்நிலை குறித்து அவரது மகன் சரணும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com