“என் பலநாள் கனவு நிஜமானது” - ‘பேட்ட’ அனிருத்

“என் பலநாள் கனவு நிஜமானது” - ‘பேட்ட’ அனிருத்

“என் பலநாள் கனவு நிஜமானது” - ‘பேட்ட’ அனிருத்
Published on

 தனது கனவு இப்போது நிறைவேறியுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். 

‘2.0’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை திரைக்கு வரவுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்துள்ளனர். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஜுதீன் சித்திக் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தத் திரைப்படம் தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் வெளியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும் ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால், ‘பேட்ட’ படத்துக்கு அவ்வளவாக திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற பேச்சு அடிப்பட்டது.

இந்நிலையில்,‘பேட்ட’ படம் குறித்து சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் தளத்தில் சில காட்டமான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் தமது பதிவில், “தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் சில திரையரங்களில் மட்டுமே ரஜினி காந்தின் ‘பேட்ட’ படம் வெளியாகிறது? டோலிவுட் பட மாஃபியாக்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நாளை படம் வெளியாக இருக்கும் சந்தோஷத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.  அதில் ரஜினியுடன் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அவர், “கனவு நிஜமாகிவிட்டது. நாளை தலைவரின் ‘பேட்ட’ வெளியாக உள்ளது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு நன்றி. மற்றும் ரசிகர்கள் எல்லோரும் நாளை கொண்டாடுங்கள்” என்று கூறி வாழ்த்தியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com