மீண்டும் முற்றியது கருத்து வேறுபாடு; இறுதிக்கட்டத்தை எட்டிய ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் விவாகரத்து!
ஹாலிவுட்டின் முன்னணி பிரபலங்களான நடிகை ஏஞ்சலினா ஜோலியும், நடிகர் பிராட் பிட்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம், கடந்த 2014-இல் நடைபெற்றது. அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-ஆம் ஆண்டு தம்பதிகள் விவாகரத்து கோரிய நிலையில், நீண்ட சமரச முயற்சிகளுக்கு பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் இருவருக்குள்ளும் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது தம்பதிகள் இருவரும் மீண்டும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதுகுறித்து ஜோலியின் வழக்கறிஞர் ஜேம்ஸ் சைமன், ”கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது கணவரிடம் இருந்து ஏஞ்சலினா விவாகரத்து கோரினார். குழந்தைகளை பராமரிப்பதில் இருவருக்குள்ளும் பிரச்னை இருந்து வருகிறது.
நீதிமன்றத்தில் வழக்குகள் எதுவும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. நீதிபதியின் ஒப்புதல் பெறவேண்டியுள்ளது. இதுதொடர்பாக பிராட் பிட்டின் வழக்கறிஞருடன் பேசியுள்ளோம். குழந்தைகள் பராமரிப்பு மற்றும் சொத்துகள் பகிர்ந்து கொடுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.