‘பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்லலாம் ஆனால்..’ இளையராஜாவுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை

‘பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்லலாம் ஆனால்..’ இளையராஜாவுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை

‘பிரசாத் ஸ்டூடியோவுக்குள் செல்லலாம் ஆனால்..’ இளையராஜாவுக்கு நீதிமன்றம் விதித்த நிபந்தனை
Published on

வழக்கை வாபஸ் பெறுவதாக அளித்த உறுதியை ஏற்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதை எதிர்த்தும் தியானம் செய்ய ஒரு நாள் அனுமதிக்கோரியும் இளையராஜ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக கடந்த 4 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது தங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற்றால் இளையராஜாவையும் அவரது உதவியாளர்களையும் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அவர் இசையமைத்த பகுதியின் இடத்தை உரிமைகோரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற இளையராஜா தனது வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

இதைஏற்றுக்கொண்ட நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு ஒருநாள் அனுமதி வழங்கியுள்ளார். பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இருதரப்பும் பேசி முடிவு செய்யலாம் எனவும் நேரத்தை பொருத்தவரை காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் அதாவது அந்த 7 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அவர் தியானம் மேற்கொள்வது குறித்தும் முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அனைத்தையும்  கவனிக்க வழக்கறிஞர் ஆணையராக லட்சுமிநாராயணனை நீதிமன்றம் நியமித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com