‘க்ரைம் திரில்லர்’ திரைப்படங்கள் எடுக்க மிஷ்கினுக்கு தடை

‘க்ரைம் திரில்லர்’ திரைப்படங்கள் எடுக்க மிஷ்கினுக்கு தடை
‘க்ரைம் திரில்லர்’ திரைப்படங்கள் எடுக்க மிஷ்கினுக்கு தடை

‘க்ரைம் திரில்லர்’ திரைப்படங்கள் எடுக்க இயக்குநர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாரை சேர்ந்த தயாரிப்பாளர் ரகுந்தன் என்பவர் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ‘கேப்டன் பிரபாகரன்’,‘சின்னக்கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு நிதியுதவி செய்துள்ளார். இவர் தனது மகன் மைத்ரேயாவை வைத்து க்ரைம் திரில்லர் படம் எடுக்க முடிவு செய்து இயக்குநர் மிஷ்கினை அணுகியுள்ளார்.

இதற்கு ஒப்புதல் தெரிவித்த மிஷ்கின் ரூ. 3 கோடி சம்பளம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சம்பளத்தின் முன்பணமாக ஒரு கோடி ரூபாய்க்கான 2 காசோலையை தயாரிப்பாளர் ரகுநந்தன் மிஷ்கினுக்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து ‘சவரக்கத்தி’,‘துப்பறிவாளன்’ என அடுத்தடுத்து படத்தை எடுத்த மிஷ்கின் ரகுநந்தனுக்கு கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்ற முன்வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தன் மகனை வைத்து மிஷ்கின் இயக்குவதாக சொன்ன க்ரைம் திரில்லர் படத்தை வேறு யாரையும் வைத்து இயக்கக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என ரகுநந்தன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் எடுக்க இயக்குநர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரகுநந்தன் தரப்பில் கூறப்பட்டுள்ள புகாருக்கு பதிலளிக்க மிஷ்கினுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com