முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதி

முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதி
முன்னாள் நண்பர் மீது அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதி

முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்கு தொடர நடிகை அமலாபாலுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை அமலா பால், இயக்குனர் விஜயை திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றார். இதனிடையே மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங், நடிகை அமலாபாலுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, பின்னர் அவற்றை நீக்கிவிட்டார்.

இந்த நிலையில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங்குக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அனுமதிகோரி நடிகை அமலாபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், தனக்கும் பவ்னிந்தர் சிங்கிற்கும் திருமணம் ஆனதாக கூறி, அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அவர் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பாடகர் பவ்னிந்தர் சிங் மீது சிவில் அவதூறு வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com