நடிகர் விஷால் தரப்பு கோரிக்கை: உயர்நீதிமன்றம் மறுப்பு

நடிகர் விஷால் தரப்பு கோரிக்கை: உயர்நீதிமன்றம் மறுப்பு
நடிகர் விஷால் தரப்பு கோரிக்கை: உயர்நீதிமன்றம் மறுப்பு

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தனி அதிகாரி நியமித்த 9 பேர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற நடிகர் விஷால் தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க, பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தமிழக அரசு தனி அதிகாரியாக நியமித்தது. இதை எதிர்த்து, தயாரிப்பாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், தனி அதிகாரிக்கு உதவுவதற்காக இயக்குனர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன் உள்பட 9 பேர் கொண்ட குழுவை, தனி அதிகாரி நியமனம் செய்தார். இதை எதிர்த்து, விஷால் தரப்பைச் சேர்ந்த தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி அதிகாரிக்கு உதவியாகவே 9 பேர் குழு செயல்படும் என்றும் சங்க நிர்வாகத்தில் தலையிடாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், தனி அதிகாரி நியமித்த 9 பேர் குழுவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. வழக்கை வரும் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com