அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
நடிகை ஹன்சிகாவின் 50 வது படமான ’மஹா’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதையொட்டி கேக் வெட்டிக் கொண்டாடி பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், ஹன்சிகா.
நடிகை ஹன்சிகா நடிகையாக முதன் முதலில் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் ’தேசமுதுரு’ படத்தில்தான் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அறிமுகமானார். தமிழில் தனுஷுடன் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்துவரும் ஹன்சிகா ‘ஷக்கலக்க பூம் பூம்’ இந்தி சீரியலில்தான் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் நடிப்புத்துறைக்குள் வந்தார். அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக பல இந்தி படங்களில் நடித்துள்ளார். அதற்காக, விருதுகளையும் வென்றுள்ளார். தமிழில், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, வேலாயுதம், தீயா வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, மான் கராத்தே, ஆம்பள, அரண்மனை, புலி, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, போக்கிரி ராஜா, போகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ஹன்சிகாவின் 50 வது படமான ’மஹா’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததையொட்டி தனது ட்விட்டரில் ”எனது 50 வது படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நன்றி. சிம்புவிற்கும் என சிறப்பான நன்றி” என்று நெகிழ்ந்து பதிவிட்டு இப்படத்தின் இயக்குநர் ஜமீல், நடிகர் சிம்பு உள்ளிட்டவர்களை டேக் செய்திருக்கிறார். ஹன்சிகாவும் சிம்புவும் ஏற்கனவே, ’வாலு’ படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.