கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை 

கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை 
கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை 

‘கல்லி பாய்’ என்ற பாலிவுட் திரைப்படத்தை ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அலியா பட் நடித்த திரைப்படம் ‘கல்லி பாய்’ . இந்தத் திரைப்படத்தை சோயா அக்தர் இயக்கி உள்ளார். இதனை ஆஸ்கர் விருதிற்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சிறந்த சர்வதேச படம் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னாதாக ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் என்ற பிரிவு இருந்தது. அந்தப் பிரிவு தற்போது சிறந்த சர்வதேச படம் என்று மாற்றப்பட்டுள்ளது. 

92ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்தியா சார்பில் படத்தை பரிந்துரைப்பதற்கான கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ‘கல்லி பாய்’ திரைப்படம் ஆர்டிகல் 15, கேசரி, டியர் காம்ரேட், உரி: த சர்ஜிகல் ஸ்டிரைக், வடசென்னை உள்ளிட்ட 28 படங்களுடன் போட்டி போட்டது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com