"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் குரூப்பிசம்" சுரேஷ் காமாட்சி குற்றச்சாட்டு !

"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் குரூப்பிசம்" சுரேஷ் காமாட்சி குற்றச்சாட்டு !
"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் குரூப்பிசம்" சுரேஷ் காமாட்சி குற்றச்சாட்டு !

பாலிவுட்டில் மட்டுமல்ல தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களிடம் குரூப்பிசம் இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா பின்புலம் உள்ளவர்கள் அவரது சினிமா வாய்ப்பை தட்டிப்பறித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு, மன அழுத்தத்தால் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று பெருமளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான் கூட தன்னை பாலிவுட்டில் இசையமைக்கவிடாமல் சிலர் தடுத்து வருவதாக கூறியிருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடராஜ் தனது நேற்று ட்விட்டர் பதிவில் "தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? " என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சாந்தனு பாக்யராஜ் ""நெபாட்டிசம் இங்கேயும் உள்ளது.. அதே குருபிசம் நபர்கள் தான் நம்முடன் யார் வேலை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்...தரத்தை பராமரிக்க அவர்கள் ஒரு சிலரை ஆதரிக்கிறார்கள், மற்றவர்களை தங்கள் தரத்தை அதிகரிக்க அனுமதிக்க மாட்டார்கள்" என தெரிவித்திருந்திருந்தார்.

இது பெரும் சர்ச்சயை கிளப்பிய நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதில் " பாலிவுட்டில் மட்டுமல்ல குரூப்பிஸம் இங்கும் உள்ளது. நடிகர்களிடம் உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம் உள்ளது. அவர்களால்தான் மிகப் பழமையான தயாரிப்பாளர்களும் ஒதுங்கியிருப்பதுவும் அதனால்தான். தான் மட்டுமே வாழவேண்டும் என நினைக்கும் அந்த பிரபல தயாரிப்பாளர் தன் பலத்தால் சில பல தயாரிப்பாளர்களை உடன் சேர்ந்துகொண்டு பலரை வாழவிடாமல் கெடுத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.

மேலும் " ஹீரோக்களுக்கு போன் பண்ணி கெடுத்துவிடுவதும், ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும், படத்தைப் பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம் பீதியை உருவாக்குவதுமாக முன்னால் விட்டு பின்னால் செய்யும் வேலையை வெற்றிகரமாக செய்து வருகிறார். அதற்கு சில தயாரிப்பாளர்கள் உடன் பட்டு நிற்பதுதான் வேதனை. வெகுவிரைவில் முகத்திரைகள் கிழியும். அதற்கு நடுவில் பாலிவுட் போல யாரும் தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. குரூப்பிஸம் விரைவில் ஒழிக்கப்பட வேண்டும்" என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com