“வாங்கிய பணத்தை கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை” - ஞானவேல் ராஜா புகார்

“வாங்கிய பணத்தை கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை” - ஞானவேல் ராஜா புகார்

“வாங்கிய பணத்தை கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை” - ஞானவேல் ராஜா புகார்
Published on

‘உத்தம வில்லன்’ பட வெளியீட்டின் போது, தன்னிடம் வாங்கிய பணத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘உத்தம வில்லன்’ படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் , நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை எனவும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

ஞானவேல்ராஜா புகாரளித்திருக்கும் நிலையில், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே தங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும், லிங்குசாமியிடம் எந்தவிதமான உத்திரவாதமும் அளிக்கவில்லை எனவும் கமல் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com