‘காலா’ வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு

‘காலா’ வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு
‘காலா’ வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு

‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘காலா’. உலகம் முழுவதும் வரும் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கூறின. இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்து, தடை விதித்துள்ளது.

இதனிடையே ‘காலா’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தது. அதில், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உரிய பாதுகாப்பு வழங்க அரசிற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கர்நாடகாவில் ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com