குடும்பப் பின்னணி படங்களில் கவனம் செலுத்தும் கவுதம் கார்த்திக்!

குடும்பப் பின்னணி படங்களில் கவனம் செலுத்தும் கவுதம் கார்த்திக்!
குடும்பப் பின்னணி படங்களில் கவனம் செலுத்தும் கவுதம் கார்த்திக்!

கவுதம் கார்த்திக் நடிப்பில் 'செல்லப் பிள்ளை' என்ற திரைப்படம் உருவாகிறது. ஃபேமிலி ஆடியன்ஸை குறிவைப்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் 'நவரச நாயகன்' என்று பெயரெடுத்த கார்த்திக், தன் மகன் கவுதமை 'கடல்' திரைப்படம் மூலம் நாயகனாக்கினார். அதன்பின் 'வை ராஜா வை', 'ரங்கூன்', 'இவன் தந்திரன்' என தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்தார். எனினும், இதுவரை எந்தப் படமும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்யவில்லை. மேலும், அவர் நடித்த சில படங்களில் ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளன எனவும் விமர்சனம் எழுந்தன.

இந்த நிலையில், தற்போது குடும்பப் பின்னணியில் உருவாகும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அருண் சந்திரன் என்பவர் இயக்கத்தில் 'செல்லப் பிள்ளை' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

குடும்பப் பின்னணியில் உருவாகும் இந்த இரண்டு படங்களும் தனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்று கவுதம் கார்த்திக் நம்புகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com