“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா

“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா
“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா

தனது சினிமா வாழ்க்கையில் தான் எந்தவிதமான பாலியல் தொல்லைகளையும் சந்தித்தது இல்லை என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். 

மதுரை காலவாசல் பகுதியில் செல்போன் கடை திறப்பு விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். அவரை காண ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் திரண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமந்தா, ரசிகர் இல்லாமல் தான் இல்லை என்றும், சினிமா துறையில் தனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார். மேலும் முன்னணி நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு, நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக சமந்தா கூறினார். 

சினிமா துறையில் பாலியல் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சமந்தா “நான் சினிமாவை கடவுளைப்போல் மதிக்கிறேன். ஒருவருக்கு நடப்பதை வைத்து அனைவருக்கும் பிரச்னை நடப்பதாக சொல்ல முடியாது. என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் எந்தவிதமான பாலியல் தொல்லைகளையும் சந்தித்தது இல்லை. எல்லாத் துறைகளிலும் உள்ளதைப் போலவே சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகள் உள்ளனர். அவர்களால் தான் பாலியல் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டு சினிமா துறையின் பெயர் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்து விட்டீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு திருமணத்திற்கு பிறகும் நான் நடித்தே வருகிறேன். இந்த வருடத்தில் மட்டும் எனக்கு 5 படங்கள் வெளியாகி உள்ளன. இன்னும் தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com