அரசியல் ரீதியான விமர்சனங்கள் நாகரிகமற்ற முறையில் இருக்கக்கூடாது - ஆர்.கே.செல்வமணி

அரசியல் ரீதியான விமர்சனங்கள் நாகரிகமற்ற முறையில் இருக்கக்கூடாது - ஆர்.கே.செல்வமணி
அரசியல் ரீதியான விமர்சனங்கள் நாகரிகமற்ற முறையில் இருக்கக்கூடாது - ஆர்.கே.செல்வமணி

திரைப்படத்துறையினர் நாகரிகமற்ற முறையில் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாது என ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். 

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் திரைப்பட நகரில் அம்மா படபிடிப்புத் தளம் அமைப்பதற்கு முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதியை முதலமைச்சர் இன்று வழங்கினார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமான செய்தியாளர் சந்திப்பில், இதுவரை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசு திரைத்துறையுடன் இணக்கமாக இருப்பதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார். 

அப்போது திரைப்படங்களின் பெயர்கள் மற்றும் படங்களில் அரசியல் ரீதியான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வமணி, உண்மையில் கட்சிப் பாகுபாடுகளை மறந்து நாகரிகமற்ற முறையில் இதுமாதிரியான வகையில் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com