ஃபெஃப்சி மற்றும் தயாரிப்பாளர் பிரச்னை: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நலவாரியம்

ஃபெஃப்சி மற்றும் தயாரிப்பாளர் பிரச்னை: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நலவாரியம்
ஃபெஃப்சி மற்றும் தயாரிப்பாளர் பிரச்னை: பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தொழிலாளர் நலவாரியம்

ஃபெஃப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று முதல் ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர். ஒப்புக்கொண்டபடி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஃபெஃப்சி தொழிலாளர்கள் இல்லாததால் ஏராளமான படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஃபெஃப்சி அமைப்பு மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தினரை பேச்சுவார்த்தை வருமாறு தொழிலாளர் நலவாரியம் அழைப்பு விடுத்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சங்கமும் ஃபெஃப்சி சம்மேளனமும் கலந்து பேசி தீர்வு காண வேண்டுமென மூத்த கலைஞன் என்ற முறையில் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com