"சொன்ன தேதியில் ஈஸ்வரன் படம் வெளியாகும்" - தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

"சொன்ன தேதியில் ஈஸ்வரன் படம் வெளியாகும்" - தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
"சொன்ன தேதியில் ஈஸ்வரன் படம் வெளியாகும்" - தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

சிலம்பரசன் நடிப்பில் வெளியாக இருக்கும்  ‘ஈஸ்வரன்’ படத்தின் வெளியீட்டை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

'AAA' படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்தார் சிலம்பரசன். இவர் முன்னதாக ’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வெளியாகி படுதோல்வி ஆன நிலையில், அந்தப்பட தயாரிப்பாளருக்கும், நடிகர் சிலம்பரசனுக்கும் இடையே பிரச்னை மூண்டது. அந்தப் பிரச்னையில் சிலம்பரசன் தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்தாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பிரச்னை நீடித்ததால் சிலம்பரசன் நீதிமன்றம் சென்றார்.

அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்தப் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய 'AAA'படத் தயாரிப்பாளர், ஈஸ்வரன் படத் தயாரிப்பாளாரை தொடர்பு கொண்டு படத்தை வெளியிட வேண்டுமானால் நஷ்டப்பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தற்போது தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ ஈஸ்வரன் திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. ’AAA'படத் தயாரிப்பாளருக்கும் ,ஈஸ்வரன் படத்தயாரிப்பாளருக்கு இடையே எந்த வித தொடர்பும் இல்லை.

இந்தச் சூழ்நிலையில் ஈஸ்வரன் படத்தை வெளியிட வேண்டுமானால் இவ்வளவு கோடி தரனும் என அந்தப் படத் தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும் கேட்பது நியாயம் இல்லை. அந்த தீய சக்திகளுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சொன்ன தேதியில் ஈஸ்வரன் படம் வெளியாகும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஈஸ்வரன் பட தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளர் சங்கம் பக்க பலமாக இருக்கும்” என்று தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com