போதைப் பொருளை வைத்திருந்தாரா நடிகை ரகுல் ப்ரீத்? விசாரணைக்கு சம்மன்

போதைப் பொருளை வைத்திருந்தாரா நடிகை ரகுல் ப்ரீத்? விசாரணைக்கு சம்மன்
போதைப் பொருளை வைத்திருந்தாரா நடிகை ரகுல் ப்ரீத்? விசாரணைக்கு சம்மன்
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் டெல்லியில்  பிடிபட்ட போதைப்பொருள் மோசடி தொடர்பான விசாரணைக்கு நடிகை ரகுல் ப்ரீத் வரும் டிசம்பர் 19-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்தாண்டு தெலங்கானாவின் மதுவிலக்கு மற்றும் கலால் துறையால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் விவகாரத்தில் தெலுங்கு திரையுலகின் பல முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் பெயர்கள் சம்பந்தப்பட்டது. இதனையடுத்து அமாலக்கத்துறையின் விதாரணை வளையத்தில் திரைப் பிரபலங்கள் வந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் மற்றும் நடிகை சார்மி கவுர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இதனையடுத்து தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை நடத்தியது சிறப்பு புலனாய்வுக் குழு. இதில் ஓர் அங்கமாக நடிகை ரகுல் ப்ரீத்திடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக பாலிவுட் போதைப்பொருள் கடத்தல் விசாரணையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால்  ரகுல் ப்ரீத் விசாரிக்கப்பட்டார். இந்நிலையில் ரகுல் ப்ரீத்துக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-அருணா ஆறுச்சாமி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com