விராத் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்!

விராத் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்!

விராத் கோலியாக நடிக்கிறார் துல்கர் சல்மான்!
Published on

இந்தி படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியாக, துல்கர் சல்மான் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் மம்மூட்டியின் மகனும் மலையாள ஹீரோவுமான துல்கர் சல்மான், தமிழில் ’வாயை மூடி பேசவும்’, ’ஓ காதல் கண்மணி’, ’சோலோ’, ’நடிகையர் திலகம்’ படங்களில் நடித்துள்ளார். இவர், இர்பான் கான், மிதிலா பால்கருடன் இந்தியில் நடித்த ’கன்வார்’ படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இதையடுத்து மீண்டும் இந்திப் படம் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறார். 

‘த ஸோயா ஃபேக்டர்’ என்ற இந்தப் படம், எழுத்தாளர் அனுஜா சவுகான் இதே பெயரில் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவாகிறது. அபி ஷேக் சர்மா இதை இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ’தேரே பின்லேடன்’, ’த ஷாக்கீன்ஸ்’, ’தேரே பின் லேடன்: டெட் ஆர் அலைவ்’, ‘பர்மனு: த ஸ்டோரி ஆப் பொக்ரான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் துல்கர் சல்மான், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஹீரோயினாக சோனம் கபூர் நடிக்கிறார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com