'சூரரைப் போற்று' பாடல் சாதிப் பிரச்னையை தூண்டுகிறதா?’ மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் புகார்

'சூரரைப் போற்று' பாடல் சாதிப் பிரச்னையை தூண்டுகிறதா?’ மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் புகார்
'சூரரைப் போற்று' பாடல் சாதிப் பிரச்னையை தூண்டுகிறதா?’ மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் புகார்

 நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று பட பாடல் சாதிப் பிரச்னையை தூண்டுவதாக புகார் வந்தால், அதை சட்டப்படி பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண்ணுருண்ட மேல எனத் தொடங்கும் பாடல் வரிகள் சாதிப் பிரச்னையை தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரியை சேர்ந்த கார்த்திக், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.

அந்த புகாரில், அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் வரிகள் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், 2022ஆம் ஆண்டு வரை படத்துக்கு தடை விதிக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார். 5 மாதங்கள் ஆகியும் தன் புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், கார்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து உரிய முடிவு எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com