சூரப்பா நியமனம்: ஆளுநரிடம் மனு அளித்த இயக்குநர்கள்!

சூரப்பா நியமனம்: ஆளுநரிடம் மனு அளித்த இயக்குநர்கள்!
சூரப்பா நியமனம்: ஆளுநரிடம் மனு அளித்த இயக்குநர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், சூரப்பா நியமனத்தை ரத்து செய்யக்கோரியும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சத்யராஜ், அமீர், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், தங்கர் பச்சான், வெற்றிமாறன், ராம், கவுதமன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படக் கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, இயக்குநர் அமீர், பாரதிராஜா, கவுதமன், வெற்றிமாறன், வி.சேகர், நடிகர் ஆரி உள்ளிட்டோர் மனு அளித்தனர். அவர்களுடன் காவிரி உரிமை மீட்புப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியனும் சென்றிருந்தார். அந்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடவும், கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டது. ஆளுநர் வழியாக குடியரசு தலைவருக்கு  இந்தக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com