‘நாயைக்கூட சாதி பார்த்துதானே சேர்த்துக்கிறோம்’ - சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ ட்ரெய்லர்

‘நாயைக்கூட சாதி பார்த்துதானே சேர்த்துக்கிறோம்’ - சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ ட்ரெய்லர்
‘நாயைக்கூட சாதி பார்த்துதானே சேர்த்துக்கிறோம்’ - சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ ட்ரெய்லர்

சுசீந்திரனின் ‘வீரபாண்டியபுரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் சுசீந்திரன் ஜெய் நடிப்பில் ’வீரபாண்டியபுரம்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். ஜெய்யின் 30 வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில், ஜெய் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார். பாரதிராஜா, ஸ்ம்ருதி வெங்கட், திவ்யா துரைசாமி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது.

தலைப்புக்கேற்பவே ட்ரெய்லர் முழுக்க முழுக்க வன்முறை காட்சிகளை நிரப்பி வெளியிட்டுள்ளனர். ’காட முட்டை’ பாடல் கவனம் ஈர்க்கிறது. ’வீட்டுல வளர்க்கிற நாயைக்கூட சாதி பார்த்துதானே சேர்த்துக்கிறோம்?’, ’தெருநாய் நம்ம பொண்ணு காலை கடிச்சிடுச்சினா தெரு நாய்யைதாண்டா வெட்டிப்போடணும்’ போன்ற வசனங்கள் படம் சாதி மறுப்பு காதல் கதைக்களமாக இருக்கும் என்று பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com