"உங்க தலைவியின் போனை ஆன் பண்ண சொல்லுங்க பா" என ஓவியா ரசிகர்களுக்கு இயக்குநர் அமுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது நடிப்பு மூலம் மக்களை கவர்ந்தாரோ இல்லையோ.. ஆனால் நல்ல குணத்தால் தமிழ் மக்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார் நடிகை ஓவியா. பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று அவராகவே வெளியேறினாலும் கூட இன்னும் சமூக வலைதளங்களில் அவரின் ரசிகர் அலப்பறைகள் ஓயவில்லை. ஓவியா இல்லாத நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் எனக் கூறி ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே, " தான் இயக்கும் தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடிகை ஓவியாவை நடிக்க வைக்க விரும்புகிறேன். அவர் விரும்பினால் இது நடக்கும்" என இயக்குநர் சி.எஸ்.அமுதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டர் வாயிலாக அமுதனுக்கு மீண்டும் ஒரு கேள்வி வைத்தார். அதில், நடிகை ஓவியாவை உங்கள் படத்தில் கமிட் செய்வீர்களா எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் அமுதன், "உங்க தலைவியின் போனை ஆன் பண்ண சொல்லுங்கப்பா" எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தனது படத்தில் நடிக்க வைக்க ஓவியாவை அமுதன் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.