\
மனமாற்றம் நடந்ததால் அதிமுகவில் சேர்ந்தேன்: நடிகர், இயக்குனர் ரவி மரியா

மனமாற்றம் நடந்ததால் அதிமுகவில் சேர்ந்தேன்: நடிகர், இயக்குனர் ரவி மரியா

மனமாற்றம் நடந்ததால் அதிமுகவில் சேர்ந்தேன்: நடிகர், இயக்குனர் ரவி மரியா
Published on

எனக்குள் மனமாற்றம் நிகழ்ந்ததால் அதிமுகவில் சேர்ந்தேன் என்று இயக்குனரும் நடிகருமான ரவி மரியா கூறினார்.

நடிகர் ஜீவா ஹீரோவாக அறிமுகமான ’ஆசை ஆசையாய்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி மரியா. தொடர்ந்து ’மிளகா’ படத்தை இயக்கினார். இதற்கிடையே வசந்தபாலன் இயக்கிய ’வெயில்’ படத்தில் வில்லனாக நடித்தார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர், எழில் இயக்கிய ’மனம் கொத்தி பறவை’ படம் மூலம் காமெடி வில்லன் ஆனார். இதையடுத்து காமெடி வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று அதிமுகவில் சேர்ந்தார். 

திடீரென்று அரசியலில் சேர்ந்தது பற்றி அவரிடம் கேட்டபோது, ‘’எனது அப்பா எம்.ஜி.ஆர் பக்தர். அவரை போல உதவிகள் செய்பவர். ஆனால், எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. சமீபகாலமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அவர்கள் ஆட்சியில் மக்கள் நன்றாக இருக்கிறார்கள். அதோடு எனக்குள் மனமாற்றம் நடந்தது. அதிமுகவில் சேருமாறு அந்தக் கட்சியில் இருக்கும் என் நண்பர்கள் அழைத்துக்கொண்டே இருந் தார்கள். இதுதான் சரியான நேரம் என்று அதிமுகவில் நேற்று என்னை இணைத்துக்கொண்டேன். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதி முகவுக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்கிறேன். 

இப்போது, வசந்தபாலன் இயக்கியுள்ள ’ஜெயில்’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறேன். எழில் இயக்கியுள்ள ’ஜெகஜாலகில்லாடி’யில் காமெடி வில்லன். மற்றும் கூர்கா, காட்டேரி, அட்லீ’, வெண்ணிலா கபடி குழு 2, ஆதி நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் படம் என தொடர்ந்து நடிப்பில் பிசி யாக இருக்கிறேன்’’ என்றார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com