“Copy அடித்து படம் எடுத்தேனா?” - தொடர் விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ சொன்ன பதில்!

“கதைக்கு தேவையான காட்சிகளை சொந்த கற்பனையில் மட்டுமே உருவாக்கி வருகிறேன்”- இயக்குநர் அட்லீ
இயக்குநர் அட்லீ
இயக்குநர் அட்லீPT desk

தாம் எந்த படத்தையும் Copy அடித்ததில்லை என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் பேசியுள்ள அவர், “நான் இயக்கும் படங்கள் ஏற்கெனவே வெளியான படங்களின் சாயல்களை கொண்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

ஆனால் கதைக்கு தேவையான காட்சிகளை சொந்த கற்பனையில் மட்டுமே உருவாக்கி வருகிறேன். நேர்மையான முறையில் திரைப்படங்களை இயக்கினாலும், திட்டமிட்டு என் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என்றுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஷாருக்கான் மற்றும் விஜய்யை இணைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான காலம் வரும் போது பிரம்மாண்டமான முறையில் அந்தப் படத்தை இயக்குவேன்” என்றார். ராஜா ராணி படம் மூலம் அறிமுகமான அட்லீ, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் வெளியான ஜவான் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com