வெளியாகிறது டயானாவின் ரகசியப் பேச்சு!

வெளியாகிறது டயானாவின் ரகசியப் பேச்சு!
வெளியாகிறது டயானாவின் ரகசியப் பேச்சு!

இளவரசர் சார்லஸுடனான பிரிவு, துயரம் ஆகியவை குறித்து இளவரசி டயானா பேசியவற்றின் தொகுப்பைக் கொண்ட ஆவணப் படம் வரும் ஞாயிற்றுக்கிழமை சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட இருக்கிறது.

சார்லஸின் முதல் மனைவியான டயானா பாரிசில் 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-இல் தனது 36 வது வயதில் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதனையடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை உருவானது. நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண வழக்கின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.அதில், டயானாவின் மரணம் அவரது கார் ஓட்டுனர் சாலை விதிகளை மீறியதால் ஏற்பட்டது எனத் தீர்ப்பு கூறப்பட்டது. அவரது 20-ஆவது நினைவு நாளை ஒட்டி இந்த ஆவணப்படம் வெளியிடப்பட இருக்கிறது. டயானாவின் ரகசியப் பேச்சுகளை வெளியிடுவதற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இளவரசி டயானாவின் வாழ்க்கையும் மரணமும் சர்ச‌சைகள் நிறைந்தவை. தற்போது வெளியாக இருக்கும் அவரது ரகசியப் பேச்சுகள் அவரைப் பற்றிய புதிய பரிமாணத்தைக் காட்டும் எனக் கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com