\
”எண்ணம் போல் வாழ்க்கை” - அசுரன் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து தனுஷ் நெகிழ்ச்சி கடிதம்

”எண்ணம் போல் வாழ்க்கை” - அசுரன் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து தனுஷ் நெகிழ்ச்சி கடிதம்

”எண்ணம் போல் வாழ்க்கை” - அசுரன் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்து தனுஷ் நெகிழ்ச்சி கடிதம்
Published on

அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தனுஷ் க்கு தேசிய விருது வழங்கப்பட்டு நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் தனுஷ் கடிதம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நான் எழுந்த போது ‘அசுரன்’ படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக செய்தி வந்தது. சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை வென்றது எனது கனவு. ஆனால் இராண்டாவது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது உங்களின் ஆசிர்வாதம். நான் இதை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை

இந்த நேரத்தில் நான் நிறைய நபர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதில் சிலரை இதில் குறிப்பிடுகிறேன். எனது தாய், தந்தை, எனது ஆசான் செல்வராகவன் ஆகியோருக்கு நன்றி.

எனக்கு ‘ சிவசாமி’ கதாபாத்திரத்தை கொடுத்த வெற்றி மாறனுக்கு நன்றி. வெற்றி, நான் உங்களை முதன்முறையாக பாலுமகேந்திரா அலுவலகத்தில் சந்தித்த போது, நாம் நண்பர்களாகவும், பின்னர் சகோதரர்களாக பழகுவோம் என்று நினைக்கவில்லை. நாம் இருவரும் நான்கு படங்களில் ஒன்றாக இணைந்தும், இரு படங்களை ஒன்றாக தயாரித்தும் உள்ளோம் என்பதை நினைக்கும்போது எனக்கு பெருமையாக உள்ளது. நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்ததும், நான் உங்களை நம்பியதும் எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. தற்போது, அடுத்ததாக நீங்கள் எனக்காக எழுதி வைத்திருக்கும் கதையை கேட்க ஆவலாக இருக்கிறேன்.  உங்களுக்கு எனது அன்புகள். தயாரிப்பாளர் தாணுக்கு எனது நன்றி 

என்னை தேசிய விருதுக்கு தேர்ந்தெடுத்த ஜூரிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அசுரன் படக்குழுவிற்கு எனது நன்றி, குறிப்பாக எனது பச்சையம்மா மஞ்சுக்கும், எனது சிதம்பரம் கென்னுக்கு, முருகன் டிஜேக்கும் நன்றி.

‘வா அசுரா’ பாடலை எனக்கு தந்ததற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிராகாஷ் குமாருக்கு எனது நன்றி. இறுதியாக எனது தூண்களாக இருக்கும் எனது ரசிகர்களுக்கு நன்றி. அவர்களது அளவில்லா அன்பு தான் என்னை தொடர்ந்து ஓட வைக்கிறது.

“எண்ணம் போல் வாழ்கை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com