போதைப்பொருள் விசாரணை: தீபிகா படுகோனின் மேனேஜர் தலைமறைவு?

போதைப்பொருள் விசாரணை: தீபிகா படுகோனின் மேனேஜர் தலைமறைவு?
போதைப்பொருள் விசாரணை: தீபிகா படுகோனின் மேனேஜர் தலைமறைவு?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்தைத் தொடர்ந்து அவரது காதலியான ரியா சக்ரபோர்தி போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் கைதுசெய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன், ரகும் ப்ரீத்சிங், சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோரின் பெயரும் இந்த வழக்கில் சிக்கியது.

இதனால் செப்டம்பர் மாதமே என்.சி.பி அதிகாரிகள் இவர்களிடம் பலமணிநேரங்கள் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் 2017ஆம் ஆண்டு தீபிகா படுகோன் தனது மேலாளரான கரிஷ்மாவிடம் போதைப்பொருள் குறித்து பேசியதாகக் கூறப்பட்ட வாடஸ்அப் சாட் சமூக ஊடங்களில் பரவி வைரலாகியது.

இதுகுறித்து ஏற்கெனவே விசாரணைகள் முடிந்து நடிகைகள் பணிக்குத் திரும்பிய நிலையில், என்.சி.பி கரிஷ்மா பிரகாஷிற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. ஆனால் வீடு பூட்டியுள்ள நிலையில் அவரைக் கண்டுபிடிக்கமுடியாததால், அவர் வீட்டில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளதாக என்.சி.பி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com