ஜேம்ஸ்பாண்டாக மீண்டும் களமிறங்கும் டேனியல் கிரேக்

ஜேம்ஸ்பாண்டாக மீண்டும் களமிறங்கும் டேனியல் கிரேக்
ஜேம்ஸ்பாண்டாக மீண்டும் களமிறங்கும் டேனியல் கிரேக்

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க டேனியல் கிரேக் ஒப்புக்கொண்டுள்ளார். 

உலகெங்கிலும் சினிமா ரசிகர்களின் ஆதர்ஷ கதாபாத்திரங்களுள் இங்கிலாந்து உளவாளி ஜேம்ஸ் பாண்டுக்கு தனிப்பெரும் இடமுண்டு. அந்தவகையில் 25ஆவது பாண்ட் திரைபப்டம் 2019ம் ஆண்டு நவம்பர் 9ல் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனங்களான இயான் புரடக்ஷன்ஸ் மற்றும் மெட்ரோ-கோல்ட்வின் மேயர் ஆகிய நிறுவனங்கள் அறிவித்தன. 

இந்தபடத்தில் டேனியல் கிரேக் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டதாக டேனியல் கிரேக் கடந்த 2015ல் அறிவித்திருந்தார். இந்தநிலையில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஐந்தாவது முறையாக நடிக்க டேனியல் கிரேக் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com