சி.எஸ் அமுதன் - விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ டப்பிங் பணிகள் துவக்கம்

சி.எஸ் அமுதன் - விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ டப்பிங் பணிகள் துவக்கம்
சி.எஸ் அமுதன் - விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ டப்பிங் பணிகள் துவக்கம்

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

‘கோடியில் ஒருவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’, ‘அக்னிச்சிறகுகள்’, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ரத்தம்’ உள்ளிட்டப் படங்களில் செம்ம பிஸியாக நடித்து வருகிறார். இதில், ‘ரத்தம்’ படத்தினை ’சிரிப்பு. ஸ்மைலி’ என்றே இன்ஷியலை வைத்துவிடலாம் என எண்ணுமளவிற்கு ’தமிழ்படம்’, ‘தமிழ்படம் 2’ படங்களை இயக்கிய சி.எஸ் அமுதன் இயக்குகிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் தயாரிக்கின்றனர். புதிய களத்தில் திருப்பங்களுடன் கூடிய மாஸ் என்டர்டெய்னராக ’ரத்தம்’ படத்தை உருவாக்கியுள்ளார் சி.எஸ் அமுதன்.

மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ், சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், ‘தெருக்குரல்’ அறிவு ஒரு தீம் பாடலை எழுதியதோடு பாடியும் உள்ளார்.

சமீபத்தில் ‘ரத்தம்’ படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவடைந்தது. வெளிநாட்டு படப்பிடிப்பை படக்குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில்,நடிகர் விஜய் ஆண்டனி கலந்துகொண்டு டப்பிங் பணிகளைத் துவக்கினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com