”ஒவ்வொரு படத்தின்போதும் அதிர்வலைகளை உருவாக்கும் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துகள்”: சச்சின்

”ஒவ்வொரு படத்தின்போதும் அதிர்வலைகளை உருவாக்கும் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துகள்”: சச்சின்

”ஒவ்வொரு படத்தின்போதும் அதிர்வலைகளை உருவாக்கும் தலைவர் ரஜினிக்கு வாழ்த்துகள்”: சச்சின்
Published on

நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருது வென்றதற்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மத்திய அரசால் விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. 45 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு முறையும் தங்கள் திரைப்படம் வெளியாகும்போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக்குறைவு. தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தொடர்ந்து தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவருகிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்” என்று உற்சாகமுடன் ரசிகராய் வாத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com