நிறைவுபெற்றது 'பாகுபலி 2' படபிடிப்பு!

நிறைவுபெற்றது 'பாகுபலி 2' படபிடிப்பு!

நிறைவுபெற்றது 'பாகுபலி 2' படபிடிப்பு!
Published on

ராஜமெளலியின் பிரம்மாண்ட இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் ‘பாகுபலி’ இப்படம் ரூ. 600 கோடி வரை வசூல் செய்து பல சாதனைகள் செய்துள்ளது.

கடந்த 2015 ஆண்டு இப்படத்திற்கான 2-ம் பாகத்தின் படபிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் சுமார் 1 வருடம் நடைபெற்று வந்த இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இத்தகவலை படத்தின் இயக்குநர் ராஜமெளலி அறிவித்துள்ளார். ‘பாகுபலி 2’ படம் ஏப்ரல் 28 அன்று வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com