ட்விட்டர் பதிவில் குவியும் கலைஞர்களின் ஆதரவு

ட்விட்டர் பதிவில் குவியும் கலைஞர்களின் ஆதரவு
ட்விட்டர் பதிவில் குவியும் கலைஞர்களின் ஆதரவு

ஒவ்வொரு தமிழனும் ஒற்றுமையோடு போராடுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. நம்முடைய ஒற்றுமையான ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் வெற்றி அடையும் என நடிகர் தனுஷ் அவரது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு விரைவில் நடைபெறும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெற்றதும் நமது போராட்டம் வெற்றி பெற்றதாக நினைத்து அமைதியாகிவிடக்கூடாது. நமது பண்பாட்டையும் அடையாளத்தையும் அளிக்கும் முயற்சிகள் வேறு எந்த வடிவில் வந்தாலும் இதே போல ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்த ஒற்றுமையான போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை, அலங்காநல்லூரில் தன் பாரம்பரியத்தை காப்பாற்ற வீரத்தோடு போராடும் இளைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகள் என நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் அவருடைய கருத்தினை பதிவு செய்துள்ளார்.

எங்கள் வீரம் எங்கள் தாயின் கருவறையிலேயே விதைக்கப்பட்டதடா தமிழா... அந்த வீரத்தோடும் ஒற்றுமையோடும் நின்று போராடும் என்னுயிர் உடன்பிறப்புகளுக்கு நன்றி... என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் ஒன்று திரண்ட இளைஞர்களை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.

ஜல்லிகட்டிற்கான இந்த போராட்டம் மன எழுச்சியை உண்டாக்குகிறது. மக்களின் தன்னெழுச்சியான இந்த போராட்டத்தால் தமிழர் உணர்வின் ஒற்றுமை எல்லா மட்டங்களிலும் தொடரட்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு என் அடையாளம், இது என் கலாச்சாரம். இதை காக்க நான் துணை நிற்பேன்! களம் நிற்பேன்!! என இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com