“விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்” - லைகாவுக்கு கமல் கடிதம்

“விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்” - லைகாவுக்கு கமல் கடிதம்
“விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும்” - லைகாவுக்கு கமல் கடிதம்

படப்பிடிப்பில் விபத்து நேர்ந்தால் தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் மது, கிருஷ்ணா மற்றும் சந்திரன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். கிரேனை இயக்க தெரியாமல் மரணத்தை ஏற்படுத்தியதாக ஆபரேட்டர் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரனுக்கு நடிகர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இனி திரைப்படம் தயாரிக்கும்போது ஹீரோ முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

இனிமேல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பிறகு படப்பிடிப்பை தொடங்க வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com