”இளவரசே சோழ நாட்டிற்கு உங்கள் பணிகள் நிறைய உள்ளது ”: ஜெயம் ரவி ட்விட்டும் கார்த்தி பதிலும்

”இளவரசே சோழ நாட்டிற்கு உங்கள் பணிகள் நிறைய உள்ளது ”: ஜெயம் ரவி ட்விட்டும் கார்த்தி பதிலும்
”இளவரசே சோழ நாட்டிற்கு உங்கள் பணிகள் நிறைய உள்ளது ”: ஜெயம் ரவி ட்விட்டும் கார்த்தி பதிலும்

”இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது” என்று ’பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவிக்கு நடிகர் கார்த்தி உற்சாகமுடன் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இதற்கான படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றன. இந்த நிலையில், தற்போது படக்குழுவினர் மத்திய பிரதேச மாநிலம் ஓர்ச்சாவுக்கு அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை நடத்த சென்றுள்ளனர். மிகவும் பழமையான நகரமான ஓர்ச்சா மத்திய பிரதேசத்தின் அரண்மனை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் காட்சிகள் நிறைவடைந்ததையொட்டி சென்னை திரும்பியுள்ள ஜெயம் ரவி, "பொன்னியின்செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படப்பிடிப்பை முடித்துவிட்டேன். மணிரத்தினம் சாரின் காமெடி சென்ஸும், என்மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதனை, ரீட்வீட் செய்த கார்த்தி ஜெயம் ரவியை டேக் செய்து ”இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம். இப்படிக்கு -வந்தியத்தேவன்” என்று உற்சாகமுடன் பதிவிட்டு தான் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com