கங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி!

கங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி!
கங்கனாவின் ட்வீட்டிற்கு பதிலடி கொடுத்த சின்மயி!

பிரபல பின்னணி பாடகி சின்மயி ஊரடங்கு காலத்தில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவிசெய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி சேகரிக்க உதவும் வகையில் பாடல் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து பேசுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் சின்மயி எப்போதும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.

சமீப காலங்களில் கங்கனா ரனாவத், பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள்மீது தொடர் குற்றம்சாட்டி வருவதுடன் போதைப் பொருள் ஊழல் பற்றியும் தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே சில நடிகர்கள் தாங்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். இதனை சுட்டிக்காட்டிய கங்கனா‘’போதைப்பொருட்கள் பயன்படுத்துவதன் விளைவு மன அழுத்தம் மட்டுமே. பெரிய வசதி மற்றும் நட்சத்திர அந்தஸ்த்து உள்ளவர்கள்கூட தங்கள் மேலாளரிடம் ‘என்னென்ன கிடைக்கும்?’ எனக் கேட்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு சின்மயி, மன அழுத்தம் என்ற சொல்லுக்கு கங்கனா களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டு பதில் ட்வீட் செய்திருக்கிறார்.
அதில், ‘’புகைப்பழக்கம் இல்லாதவர்கள், டீடோட்டலர்கள், டீ/காஃபி குடிக்காதவர்கள், பான் உபயோகிக்காதவர்கள், உடல்நலத்தில் அக்கறைகொண்டவர்கள், கடவுள் பக்தி உள்ளவர்கள் போன்ற அனைவருக்கும் மன அழுத்தம் வரலாம். மருத்துவம் மற்றும் சூழ்நிலையால் வரும் மன அழுத்தத்திற்கான வித்தியாசத்தை தெரிந்துகொள்வது அவசியம்.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வயதினரும் பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தற்போது இதை வேறுவழியில் திசைதிருப்பிக் கொண்டிருக்கின்றனர். மன அழுத்தம் என்பது நிஜமானது. உதவி தேவை’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com