சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை!

சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை!
சிம்புதேவன் இயக்கத்தில் ஒரு கதை, ஆறு பார்வை!

வெங்கட்பிரபு தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் அடுத்த படத்தில் விஜயலட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

’இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 302 ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, ‘புலி’ படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இவர் அடுத்து, ’இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தை இயக்குவதாக இருந்தது. டைரக்டர் ஷங்கர் மீண்டும் அதை தயாரிப்பதாக இருந்தார்.

வடிவேலுவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்தப் படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, இயக்கு னர் வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் படம் இயக்குகிறார் சிம்புதேவன்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் ’சென்னை 28’ டீம் நடிக்கிறது. விஜயலட்சுமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர் தவிர சென்னை 28 படத்தில் நடிக்காதவர்களும் நடிக்க இருக்கின்றனர். பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். 


இதுபற்றி படக்குழு கூறும்போது, ‘இது அந்தாலஜி வகை படம். அதாவது ஒரு கதை. ஆறு பார்வையில் வெவ்வேறு கோணங் களில் சொல்லப்படுவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. வித்தியாசமான பாடல் ஒன்றை ஆறு இசை அமைப்பாளர்கள் இணைந்து பாட உள்ளனர்’ என்று தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com