ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ‘வென்று வா வீரர்களே’ பாடலை உருவாக்கியுள்ள யுவன்

ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ‘வென்று வா வீரர்களே’ பாடலை உருவாக்கியுள்ள யுவன்
ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ‘வென்று வா வீரர்களே’ பாடலை உருவாக்கியுள்ள யுவன்

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உருவாக்கியுள்ள ‘வென்று வா வீரர்களே’ பாடலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பத்திற்கும் மேற்பட்ட தமிழக வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே, இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ. 5 லட்சம் பரிசுத்தொகை அறிவித்தது தமிழக அரசு. திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றுள்ள தமிழக வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடி இசையமைத்திருக்கிறார். ’வென்று வா வீரர்களே’ என்று உற்சாகக் குரலில் யுவன் பாடுவது சிலிர்ப்பூட்டும் வகையில் அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர். இந்தப் பாடலை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com