துபாய் பாலைவன வெயிலில் காயப்போகும் ‘செக்கச்சிவந்த வானம்’

துபாய் பாலைவன வெயிலில் காயப்போகும் ‘செக்கச்சிவந்த வானம்’

துபாய் பாலைவன வெயிலில் காயப்போகும் ‘செக்கச்சிவந்த வானம்’
Published on

‘செக்கச்சிவந்த வானம்’ படப்பிடிப்புக்காக மணிரத்னம் உள்ளிட்ட படக்குழு தூபாய் செல்ல இருக்கிறது.

இந்தியாவிலுள்ள வடநாட்டை மையமாக வைத்து படம் எடுப்பதில் வல்லவர் மணிரத்னம். அவருக்கு எப்போது எல்லைப் பகுதியில் படம் எடுப்பது என்றால் அத்தனை விருப்பம். மும்பை, காஷ்மீர், டெல்லி என தமிழ் சினிமாவை காட்சி ரீதியாக இந்திய சினிமாவாக மாற்றிக் கொடுத்தவர் அவர். ஆனாலும் அதையும் மீறி அவர் வெளிநாட்டிற்குப் போய் படப்பிடிப்புக்களையும் நடத்தியிருக்கிறார். ‘குரு’, ‘காற்று வெளியிடை’ என அவரது சினிமா காட்சிகள் அண்டை நாடுகளை நாடிப்போய் இருக்கிறது. 

இந்நிலையில் அவர் இயக்கி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்காக அவரது படக்குழு துபாய் செல்ல இருக்கிறது. சிம்பு, விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்களின் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்படு வந்தது. அவர்களின் பகுதிகள் முடிவை எட்டியதால் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவை எட்டி உள்ளன. அதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக இதன் படக்குழு தூபாய் செல்லத் திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இதனை இன்னும் படக்குழு உறுதி செய்யவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com