மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு!

மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு!
மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு!

மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை நோவெக்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி வழக்கு பதிந்துள்ளது.

தமிழ் திரைப்பட சில பாடல்களின் காப்புரிமையை  நோவெக்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.  அந்த நிறுவனத்தின் பாடல்களை ‘மாஸ்டர்’ படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் மாஸ்டர் பட தயாரிப்பாள சேவியர் பிரிட்டோ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி சிபிசிஐடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, தற்போது சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி வழக்கு பதிந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com