மற்றவங்களுக்காக வாழ முடியாது: யாமி கவுதம் கோபம்

மற்றவங்களுக்காக வாழ முடியாது: யாமி கவுதம் கோபம்
மற்றவங்களுக்காக வாழ முடியாது: யாமி கவுதம் கோபம்

என் வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன், மற்றவர்களுக்காக நான் வாழ முடியாது என்று நடிகை யாமி கவுதம் கூறினார்.

தமிழில் கவுரவம், தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை யாமி கவுதம்.

சிவப்பழகு கிரீம் தொடர்பான விளம்பரத்தில் நடித்துவரும் இவர் மற்றும் நடிகர் ஷாரூக்கான், தீபிகா படுகோன், சோனம் கபூர் போன்ற நடிகர், நடிகைகளை இந்தி நடிகர் அபய் தியோல் கடுமையாகச் சாடியிருந்தார். இது தொடர்பாக யாமி கவுதமிடம் கேட்டபோது, ‘எனது வாழ்க்கையை நான் வாழ்கிறேன். எனக்கு சுயமாக சிந்திக்க தெரியும். எதில் நடிக்க வேண்டும், வேண்டாம் என்ற முடிவை நான் மட்டுமே எடுக்க முடியும். மற்றவர்களின் கருத்துகளுக்கு நான் வாழ முடியாது’ என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com