”எனக்கு இந்தியக் குடியுரிமை கெடச்சிருச்சே..!” - ஆவணங்களை வெளியிட்டார் நடிகர் அக்‌ஷய் குமார்! !

தனக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்திருப்பதற்கான ஆவணங்களை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.
அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்file image

தனக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்திருப்பதற்கான ஆவணங்களை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். கனடா குடியுரிமை வைத்திருந்த அக்‌ஷய் குமார் மீது பல்வேறு விவகாரங்களின் போது விமர்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக, அக்‌ஷய் குமார் தான் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் கனடாவில் முதலீடு செய்வதாகவும், அவருக்கு இந்தியா மீது பற்று இல்லை என்றும் பலரும் கூறி வந்தனர். இதையடுத்து, தனது பாஸ்போர்ட்டை கனடா அரசிடம் அக்‌ஷய் குமார் ஒப்படைத்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு இந்திய குடியுரிமை கிடைத்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷய் குமார், அது தொடர்பான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com