‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம் 

‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம் 
‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம் 

அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் கே.பி.செல்வா தொடர்ந்துள்ள வழக்கை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. 

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஆனால் இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கடந்த ஒரு வருடமாக கே.பி.செல்வா என்ற உதவி இயக்குனர் போராடி வருகிறார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அட்லி மற்றும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தரப்பிற்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் ஒரு நாள் அவகாசம் கொடுத்தது. இதையடுத்து அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் அட்லி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனக்கு வேறு சில வழக்குகள் உள்ளதால், இந்த வழக்கை திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால் அவ்வளவு நாள் அவகாசம் கொடுக்க முடியாது என்று கூறிய நீதிபதி, ஒரு நாள் மட்டும் அவகாசம் கொடுத்தார். இதையடுத்து நாளை இந்த வழக்கு தொடர்பாக வாதாடுவதாக அட்லி தரப்பு வழக்கறிஞர் ஒப்புக்கொண்டார். இதனால் பிகில் கதை தொடர்பான வழக்கு நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com